புதன், 24 ஜூலை, 2019

காக்கை குருவி எங்கள் சாதி







சாதி மத இன
பற்று என்ற போர்வைக்குள்ளே
பரவி இருந்த விசம் அருந்தி
வீழ்ந்து விடாமல்
கடந்து வந்த அனுபவங்கள்.

அவை யாவும்
மனிதனை மனிதன்
ஒடுக்கவும் ஒதுக்கவும்
உயர்வு தாழ்வை விதைக்கவும் செய்கிறது என்ற
உண்மையை ஏற்பார்கள்

அதை கடந்து வந்து
உயிரை நேசிக்கும் பாதையை
ஒரு போதும் பின் தொடர மாட்டார்கள்.

பிறக்கும் போது
பெற்றோர் இரத்தமே மாறித்தான்
குழந்தை பிறக்கிறது.

இருந்தும்
வளர்ந்த மிருகங்களாய் 
வலம் வருவதை
மாற்ற மட்டும் ஏனோ 

மனம் இருப்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக