வெள்ளி, 26 ஜூலை, 2019

மழையோடு நான்



தொடவும் மனமில்லை 
பிரியவும் மனமில்லை
தொடரவும் நேரமில்லை

காதலா? காமமா? புரியாமல்!
மழையோடு நான்.

தாரம் இல்லா இரவின் தாக மழை



மழைக்கு! ஏது?
கண்ணும்! காதும்!
இருந்திருந்தால் தினமும்
மின்னல் எடுத்த நிழற் படத்தில்!
இடி ஒலித்த பறையின் ஓசையில்!

மழையில்
வருகையின் வாடையில்
என்னவள் உடன் இல்லாமல்
நான் மட்டும் தனிமையில்
தவிக்கும் நிலை கண்டும்

மெல்லிய சாரலின்
தொடுதல் கூட,
ஊசியினை போல்
குத்தி காயப்படுத்துவது அறிந்தும்

வளிமண்ட வெப்பம் இறந்த பொழுதில்
என் உடலில் தணல் தனிந்து
குளிர்ந்த காற்றோடு
போரிட்டுக் கொண்டிருந்த
எந்தன் மூச்சுக் காற்றின் ஈரம் அறிந்தும்

என்னை துரத்துவதை நினைந்து
வருந்தி இறந்திருக்குமே - இல்லை
வானில் இருந்து பூமியினை நோக்கி
இறங்காமலாவது இருந்திருக்குமே

இப்படி இரக்கமற்று
அர்த்த ராத்திரியில்
தினந்தோறும் தொடர்ந்து வந்து
என் இதயத்தின் இயக்கத்தை
இம்சை செய்திருக்காதே.....!

வியாழன், 25 ஜூலை, 2019

ஆற்றல்



ஆற்றலின் 
அழிவின்மை விதியும்
காதலும் ஒன்றோ என்ற ஐயம்!

தன் நிலையினை 
இழந்த பின்னும் - ஏன்?
இறந்த பின்னும்

இரண்டும்
எங்கோ? ஏதோ? 
ஒரு விதத்தில் 
உயிரோடு உலவிக் 
கொண்டிருக்கின்றதே....!

இராட்சசிகள்






பெண்ணுக்கான
ஆணின் தியாகத்தில்
இயற்கையின் முழு சொத்துக்களும்
அபகரிக்கப்பட்டுவிட்டன,

பெண்பால் இல்லா
கவிதைகளும் இல்லை
பெண் புகழ் இல்லா
இயற்கை வர்ணனையும் இல்லை.

அன்பும் வீரமும் மட்டுமே
ஆணின் கல்வெட்டுகளாய்
ஆழப்புதைத்து வைத்து வேடிக்கை பார்க்கும்
#இராட்சசிகள் நிறைந்த பிரபஞ்சம் இது.

புதன், 24 ஜூலை, 2019

காக்கை குருவி எங்கள் சாதி







சாதி மத இன
பற்று என்ற போர்வைக்குள்ளே
பரவி இருந்த விசம் அருந்தி
வீழ்ந்து விடாமல்
கடந்து வந்த அனுபவங்கள்.

அவை யாவும்
மனிதனை மனிதன்
ஒடுக்கவும் ஒதுக்கவும்
உயர்வு தாழ்வை விதைக்கவும் செய்கிறது என்ற
உண்மையை ஏற்பார்கள்

அதை கடந்து வந்து
உயிரை நேசிக்கும் பாதையை
ஒரு போதும் பின் தொடர மாட்டார்கள்.

பிறக்கும் போது
பெற்றோர் இரத்தமே மாறித்தான்
குழந்தை பிறக்கிறது.

இருந்தும்
வளர்ந்த மிருகங்களாய் 
வலம் வருவதை
மாற்ற மட்டும் ஏனோ 

மனம் இருப்பதில்லை.

நாஆர்த்திகன்




என் வாழ்க்கை
என் கையில் என்று 
சொல்லிக் கொண்டே
சென்றார் அத்திவரதரை தேடி.....

புத்தி





கோவிலுக்குள் ஆராதிப்பவர்
பக்தர் ஆனார்
கோவில் ஏன் என்று ஆராய்ந்தவர்
புத்தர் ஆனார்