புதன், 7 மார்ச், 2018

நிலவு!!




யாமத்தில்
இராட்சச ஒளி மீன்களோ உலகத்தை ரசிக்கும்!
யாமபதியே!
உலகின் கண்களோ உன்னை ரசிக்கும்.!

ஞாயிறு, 4 மார்ச், 2018

பிரிந்த நேரத்தில்



அமில மழையாய் பொழிகிறது 
அவள் கருவெண் மேகத்தில்!
அவன் பறக்கும் வானூர்தியின் காற்று
மேகத்தில் மோதி பிரியும் வேளையில்..!

சனி, 3 மார்ச், 2018

உயிரே!

உயிரே!
உன் நினைவின்றி என் நித்திரை எனில் 
உறக்கம் இனி வேண்டாம் எனக்கு - உயிரே!
உலகில் இருக்க வேண்டாம் இவ்வுடல் - ஆம்
உயிரற்று உடல் மட்டும் எப்படி இருக்கும்.!!

வெள்ளி, 2 மார்ச், 2018

விழியா? உளியா?



சிற்பிகளுக்கு!
கல்லை கண்டதும் சிற்பம் தெரிகிறதாம் 
சிலாகித்துக் கொள்கின்றனர்!

பாவம்! அவர்கள் -  இதுவரை
உன்னை பார்க்கவில்லை!
பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும்
யார் சிற்பி! என்று, 

உன்னை நோக்கி
சிலையாய் அவர்கள் நிற்கும் போது.!

உன் விழியே 
உலகின் சிறந்த உளி என்று அறியும்
அக்கணம் முதல் - அவர்களின்
தலைக்கணம் அழிப்பர்.!

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

வாடாத பூ





மலரே இதென்ன மாயம்
மயங்கி மண்டு விட்டதே எனதுயிர்!

உன்
உதட்டினுள்ளே இருக்கும்
காணத கவர்ச்சியாய்!
புதையல் கற்களாய்!!
வாடமல் என்றும் வசந்தம் தரும் பூவாய்!!!

எந்நேரமும் மலந்தே இருக்கும் 
உன் முத்துப் புன்னகையில்...!!!
மயங்கி மண்டே விட்டதே எனதுயிர்...!!!

சனி, 24 பிப்ரவரி, 2018

கண்மணியே


கதைத்தது போதும் 
கற்பித்தலை நிறுத்து!

இமைத்து கொள்ளேன்
இல்லை என்னை
இப்போதே கொல்வாய்!

தாங்காது இனிமேலும்
தங்காது என்னுயிர்
தடுத்திடு! தடுத்திடு!!

எனைதாக்கும் உன்விழி மூடு
உன் தயவால் என்விழி
காத்திடு! காத்திடு!! கண்மணியே!!!

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

விழி வழி




அழகு ஓவியமே
உடல் உலகை வியந்து சுற்றினாலும்

உள்ளம் உன் வில்லின் வழி வரும்
அம்பில் அகப்படவே அலையாய் ஆர்ப்பரிக்கிறது

நெஞ்சு உன்நிலவின் பூகம்பத்தால் அதிர்வதற்கே  
பூக்களோடு உனைநோக்கி புலம்புகிறது 

ஊமை தான் என்றாலும்
பேசும் உன் வார்த்தையில்
துஞ்சவில்லையே என்நெஞ்சும் கண்ணே

உயிரே உன் கருவிழி காந்தத்தின் ஈர்ப்பில்
கவர்ந்தாய் என்னை காட்சிகளையும் மறந்தேனடி
இமைக்கவும் முடியாமல் இயங்கவும் முடியாமல்
உன் மயக்கும் மந்திரதால் மாண்டேனடி

இறக்கத்தோடு ஒறுமுறை காட்டடி கள்ளியே
எனை கவர்ந்த கண்ணியை காட்டடி கன்னியே
உனை கொணர்ந்துவிட வழி காட்டடி கனியே
இறக்கவிடு மறுமுறை அளக்கமுடியாவுன் நிலஒளியால்

என்னை உன்னில் இறக்கி விடடி முழுமதியால்
உன்னை என்னிடம் இழந்து விடடி விழிவழியால்


எதுவென் மனதினையேற்ற ஒளி என்றறியாதிருந்தேன்
இதோவுன் விழிவழி நீ உணர்த்தியதும் அறிந்தேன்