வெள்ளி, 2 மார்ச், 2018

விழியா? உளியா?



சிற்பிகளுக்கு!
கல்லை கண்டதும் சிற்பம் தெரிகிறதாம் 
சிலாகித்துக் கொள்கின்றனர்!

பாவம்! அவர்கள் -  இதுவரை
உன்னை பார்க்கவில்லை!
பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும்
யார் சிற்பி! என்று, 

உன்னை நோக்கி
சிலையாய் அவர்கள் நிற்கும் போது.!

உன் விழியே 
உலகின் சிறந்த உளி என்று அறியும்
அக்கணம் முதல் - அவர்களின்
தலைக்கணம் அழிப்பர்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக