சிற்பிகளுக்கு!
கல்லை கண்டதும் சிற்பம் தெரிகிறதாம்
சிலாகித்துக் கொள்கின்றனர்!
பாவம்! அவர்கள் - இதுவரை
உன்னை பார்க்கவில்லை!
பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும்
யார் சிற்பி! என்று,
உன்னை நோக்கி
சிலையாய் அவர்கள் நிற்கும் போது.!
உன் விழியே
உலகின் சிறந்த உளி என்று அறியும்
அக்கணம் முதல் - அவர்களின்
தலைக்கணம் அழிப்பர்.!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக